search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு பயணம்"

    பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரிக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை:

    பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் தடையை மீறி படகு சவாரி தொடர்ந்து நடந்து வருகிறது.

    நேற்று முன்தினம் படகு சவாரிக்கு 10-க்கும் மேற்பட்டோரை அழைத்து சென்றபோது 2 படகுகள் ஒன்றோடொன்று மோதின.

    இதில் நிலைதடுமாறி படகு கவிழ்ந்ததில் காசிமேட்டை சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மேரி பலியானார். இதுகுறித்து திருப்பாலைவனம போலீசார் வழக்குப்பதிவு செய்து பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம், நடுவூர் மாதாகுப்பத்தை சேர்ந்த 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஒ. நந்தகுமார் கூறியதாவது:-

    பழவேற்காட்டில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் தடையை மீறி படகு சவாரி செய்தால் படகு ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர்களது படகு பறிமுதல் செய்யபடும். அங்கு ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். படகு சவாரியை தடுக்க கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற சனி, ஞாயிறு இதுகுறித்து மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ள பிரியங்கா காந்தி, கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #LSpolls #Congress #PriyankaGandhi #GangaYatra
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் தொடங்கினார். 

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ள பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கை நதிக்கரையில் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜேந்திர திரிபாதி கூறுகையில், உ.பி.யில் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ள பிரியங்கா, கங்கை நதிக்கரையில் மூன்று நாட்கள் படகு பயணம் மேற்கொள்ள உள்ளார். நதிக்கரை வழியாக பிரசாரம் செய்யும் முதல் தலைவர் பிரியங்கா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் 18-ம் தேதி பிரயாகராஜ் நகரின் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி 140 கி.மீ. தூரம் படகில் பயணித்து அங்குள்ள கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். கங்கா யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் சத்நாக் பகுதியிலிருந்து தொடங்கி வாரணாசியின் அஸி காட் வரை செல்கிறார் என தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #PriyankaGandhi #GangaYatra
    ×